Thursday, May 10, 2012




ஏக்கம்

விரித்த சிறகு
வலிப்பதெதற்கு -என்
தேசமின்று
தூரமாகிப்போனதா?







காதலி

என்னை உறங்கவிடு
நிஜங்கள் கனவாகிப்போனது
வலிக்க -என்
கனவிலும் வந்து
உறுத்தாதே.
என்னோடு நிலைக்க
மறுத்த -உன்
தடங்களை அழிக்கவிடு






இல்லை

சோகத்தின் இறுக்கத்தில் - வந்த
தேகத்தின் சோர்வில் - எழுந்த
சேதத்தின் விளைவில் - எஞ்சிய
என் மதிக்கு செயலில்லை - என்
நின்மதிக்கு பொருளில்லை
தலைவிதிக்கு எழிலில்லை.





நீ

உன்னால் நான்
படுகுழிக்குள்
விழுத்தப்பட்ட பின்னும்
எம்பி எம்பி
உன்னையே எதிர்பார்க்கிறேன்.





நினைவு

இழந்ததை எல்லாம்
இறைவன்
திருப்பி தந்தால்
இன்னுமொரு
புதிய வாழ்வு
பிறரில் சலிக்காமல்
வாழ்ந்து விடுவேன்.





எண்ணம்

தொலைக்க நினைக்கிறேன்
தூய்மையற்ற நினைவுகளை
மறக்க நினைக்கிறேன்
மனதின் சுமைகளை
என்னுள்
பதிக்க நினைக்கிறேன்
நிறைவேறும் கனவுகளை


No comments:

Post a Comment