Monday, May 14, 2012



நடப்பு கவிதை

வாழ விடு

07, MAY 2012
Views 175
மாறிக் கொண்டிருக்கும்
காலங்களில்
ஆறிக் கொண்டிருக்கும்
காயங்களில்
கீறிக் கொண்டிருக்கும்
சில கூர் முனைகளைத் தாண்டி
பேசிக் கொண்டிருக்கும்
என் மூச்சு
இன்றும் நின்றுவிடலாம்
ஆகவே
வாழும்வரை வாழ
வழிவிடு என்கிறேன் நீயோ
வலிகளை என் மீது
வாரி எறிகிறாய்
என் சமூகமே.

No comments:

Post a Comment